இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை நேர்மறையாக முடிவடைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடர்ந்து 6-ஆவது நாளாக முன்னேற்றம் கண்டு புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவடைந்துள்ளன. நிஃப்டி 55.30 புள்ளிகள் உயர்ந்து 18,618.05-இல் நிலைபெற்றுள்ளது.
கடந்த 5 வர்த்தக தினங்களாக நேர்மறையாக முடிந்திருந்த சந்தை, செவ்வாய்க்கிழமை காலையில் சற்று பலவீனமாகத் தொடங்கினாலும், நேரம் செல்லச் செல்ல முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. இதையடுத்து, காளையின் எழுச்சி தொடர்ந்ததால் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தன. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை வாங்கி வருவதும், ஆசிய சந்தைகளில் வர்த்தகம் நேர்மறையாக இருந்ததும் சந்தைக்கு சாதகமாக அமைந்தது. குறிப்பாக எஃப்எம்சிஜி, மெட்டல் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
177 புள்ளிகள் உயர்வு: காலையில் 142.72 புள்ளிகள் குறைந்து 62,362.08-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதற்கு கீழே செல்லவில்லை. பின்னர், அதிகபட்சமாக 62,887.40 வரை உயர்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் சென்செக்ஸ் 177.04 புள்ளிகள் கூடுதலுடன் 62,681.84-இல் புதிய உச்சத்தில் முடிவடைந்தது. 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் 15 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன.
ஹெச்யுஎல் அபாரம்: முன்னணி நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனி லீவர் (ஹெச்யுஎல்) 4.27 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு
அடுத்ததாக, சன்பார்மா, நெஸ்லே, டாக்டர் ரெட்டி, டாடா ஸ்டீல்,
ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், டைட்டன், ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் சிறிதளவு உயர்ந்து விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
இண்டஸ் இண்ட் பேங்க் சரிவு: அதே சமயம், பிரபல தனியார் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 1.50 சதவீதம், பஜாஜ் ஃபின் சர்வ் 1.27 சதவீதம், மாருதி சுஸýகி 1.04 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பவர் கிரிட், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியின் பெயிண்ட் ஆகியவை 0.50 முதல் 1 சதவீதம் வரை குறைந்தன.
சந்தை மதிப்பு உயர்வு
மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.26 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.286.15 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) திங்கள்கிழமை ரூ.935.88 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

உலகின் அதிக வெப்பமான 100 நகரங்களில் 98 இந்தியாவில்! நாடு முழுக்க வெப்ப அலை!!

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


