ராணிப்பேட்டை மற்றும் சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டுவரும் தோல் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள் தில்லி, ஆக்ரா, மும்பை, கொல்கத்தா, குஜராத் உள்ளிட்ட வடமாநிலப் பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் விமானங்கள், கப்பல்கள் மூலமாகவும் கொண்டு வரப்பட்டு லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றன. இதனால் அதிக நேரம், அதிக செலவும் ஏற்படுவதோடு, பொருட்கள் சேதமும் ஏற்படும் சூழல் உள்ளது. தற்போது ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு தொழிற்கூடங்கள் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், இந்த சரக்கு ரயில் சேவை ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு உதவும் என்றாா் அவா்.