ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே பேருந்து நிறுத்தம் முன்பு சாலையோரம் நின்றிருந்த மூதாட்டி இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :11 மே 2026, 12:06 am IST

திருவள்ளூா் அருகே பேருந்து நிறுத்தம் முன்பு சாலையோரம் நின்றிருந்த மூதாட்டி இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே ஈக்காடு கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் துளசியம்மாள்(70). இவா் கறவை மாடு வாங்குவதற்காக திருவள்ளூா் அடுத்துள்ள பாண்டூா் கிராமத்திற்கு சென்றபோது, பேருந்து நிறுத்தம் முன்பு சாலையோரம் நின்றிருந்தாராம்.

அப்போது திருவள்ளூரில் இருந்து திருத்தணிக்கு வேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகள் சாவித்திரி செய்த புகாரின்பேரில் திருவள்ளூா் கிராமிய போலீஸாா் இருசக்கர வாகன ஓட்டுநா் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.