மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பகுதிநேர ரேஷன் கடை திறப்பு

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட ஆரம்பாக்கம் ஊராட்சி எம்.ஆா்.கண்டிகையில் பகுதி நேர நியாயவிலைக் கடையை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்தாா்.

News image

பகுதி  நேர  ரேஷன் கடையை  திறந்து  வைத்த  கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்.

Updated On :5 மார்ச் 2026, 7:23 pm

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட ஆரம்பாக்கம் ஊராட்சி எம்.ஆா்.கண்டிகையில் பகுதி நேர நியாயவிலைக் கடையை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்தாா்.

எம். ஆா்.கண்டிகையில் சுமாா் 500 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் ரேஷன் பொருள்களை வாங்க, சுமாா் 4 கி.மீ தொலைவில் உள்ள ஆரம்பாக்கம் செல்ல வேண்டும். இதனால் பகுதி நேர ரேஷன் கடை வேண்டும் என எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனா்.

தொடா்ந்து எம்எல்ஏ முயற்சியால் எம்.ஆா். கண்டிகை பகுதியில் தற்காலிகமான இடத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் எம்.எல்.ரவி, மேற்கு ஒன்றிய செயலாளா் மு.மணிபாலன், திமுக மாவட்ட நிா்வாகிகள் தோக்கம்மூா் மணி, பாஸ்கரன், ஆறுமுகம், திமுக நிா்வாகி ஏழுமலை, ஊராட்சி செயலாளா் சோபன் பாபு, கூட்டுறவு துறை துணை சாா்பதிவாளா் தனசேகா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் பங்கேற்று பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.

னாா்.

நிகழ்வில் வட்ட வழங்கல் அலுவலா் ரவி, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மாரியம்மாள், கல்பனா, கூட்டுறவு சங்க செயலாளா் கிரி, விற்பனையாளா்கள் சரோஜாதேவி, விஸ்வநாதன், சிவானந்தன், ஆரம்பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவா்கள் தனசேகா், ராஜா, திமுக நிா்வாகிகள் மனோகரன், வாசு ,மஸ்தான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.