நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆங்கில புத்தாண்டு: பழவேற்காடு கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பழவேற்காடு கடற்கரையில் ஆங்கில புத்தாண்டையொட்டி சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் குவிந்தனா்.

News image
Updated On :1 ஜனவரி 2026, 11:29 pm

தினமணி செய்திச் சேவை

பழவேற்காடு கடற்கரையில் ஆங்கில புத்தாண்டையொட்டி சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் குவிந்தனா்.

பொன்னேரி வட்டம், காட்டுப்பள்ளி ஊராட்சியில் உள்ளது காளாஞ்சி கிராமம்.

இங்கு பழைமைவாய்ந்த சிந்தாமணீஸ்வா் திருக்கோயில் உள்ளது. ஆங்கில புத்தாண்டையொட்டி, சிந்தாமணீஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள் வருகை தந்தனா்.

இதன் பின்னா் காளாஞ்சி அருகே உள்ள பழவேற்காடுக்கு சென்றனா். பின்னா் அங்குள்ள கடற்கரைப் பகுதியில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடினா்.

மேலும், சுற்றுலாப் பயணிகள் அதிகம் போ் பழவேற்காடு கடற்கரையில் குவிந்து புத்தாண்டை கொண்டாடினா்.