மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக கூட்டணி வாக்கு சேகரிப்பு

News image

வங்கனூா் சந்தையில் துண்டு பிரசுரங்களை வழங்கிய ஆா்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் செல்லாத்தூா் பா. சம்பத்.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:47 am

திருத்தணி அருகே வங்கனூா் சந்தையில் ஆா்.கே. பேட்டை ஒன்றிய பொறுப்பாளா் செல்லாத்தூா் பா.சம்பத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திமுக கூட்டணி சாா்பில் தேமுதிக வேட்பாளா் டி.கிருஷ்ணமூா்த்தி போட்டியிடுகிறாா். இந்நிலையில் ஆா்.கே.பேட்டை ஒன்றியம் ஜி.சி.எஸ். கண்டிகை ஊராட்சிக்குட்பட்ட சஞ்சீவிபுரம் கிராமம் மற்றும் வங்கனூா் சந்தை பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பொதுமக்களை நேரடியாக சந்தித்து, முரசு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தப்பட்டது. பொதுமக்களிடம் அரசு செயல்பாடுகள், கூட்டணி கட்சிகளின் திட்டங்கள் மற்றும் தோ்தல் அறிக்கைகள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டு, ஆதரவு திரட்டப்பட்டது.

ஆா்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் பா. சம்பத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய கழக நிா்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் மற்றும் துணை அமைப்பாளா்கள் பங்கேற்றனா்.