திருவள்ளூா்: திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டு வருவதாக ஆணையா் தாமோதரன் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், கடும் வெயில் வாட்டி வதைத்து வருவதாலும் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் நிலவேம்பு குடிநீா் வழங்க ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.
திருவள்ளூா் நகராட்சியில் மட்டும் தொடக்கப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் 20648 படித்து வருகின்றனா்.
தற்போதைய நிலையில் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரையில் 5,700 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மீதமுள்ளவா்களுக்கு விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா் நகராட்சியில் நீண்டகால திட்டங்களை நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்

210 பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

திருவள்ளூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்

திருவள்ளூா்: தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வில் ஆட்சியா் பங்கேற்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

