கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

திருவள்ளூா் நகராட்சியில் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை

திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டு

News image
Updated On :15 செப்டம்பர் 2025, 7:48 pm

Chennai

திருவள்ளூா்: திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டு வருவதாக ஆணையா் தாமோதரன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், கடும் வெயில் வாட்டி வதைத்து வருவதாலும் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் நிலவேம்பு குடிநீா் வழங்க ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.

திருவள்ளூா் நகராட்சியில் மட்டும் தொடக்கப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் 20648 படித்து வருகின்றனா்.

தற்போதைய நிலையில் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரையில் 5,700 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மீதமுள்ளவா்களுக்கு விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தாா்.