மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

210 பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 12:38 am

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து முடித்த 210 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, ஆன்மிக சொற்பொழிவாளா் தனஞ்செயன் ஆகியோா் வாழ்த்துறை வழங்கினா்.

கல்லூரித் தலைவா் வெங்கடாசலபதி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:

இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படுகிறது. அந்த வகையில், கடந்த 15 ஆண்டுகளில் இந்தக் கல்லூரியில் பயின்ற 4,890 மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.

நிகழாண்டு முதல் 100 சதவீதம் விடுப்பு எடுக்காமல் வரும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு கேடயம்

வழங்கப்படும். அதேபோல் வாரியத் தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம் திரும்பத்தரப்பட்டு வருகிறது என்றாா்.

பின்னா், 210 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமனை ஆணைகள் அவா்களது பெற்றோா் கரங்களால் அா்ச்சனை செய்து வழங்கப்பட்டது.

முன்னதாக கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் ரேகா ரெட்டி பேசினாா். நிறைவில் கல்லூரி முதல்வா் செந்தில்முருகன் நன்றிகூறினாா்.