தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ரூ.1 கோடியில் திருத்தணி முருகன் மலைக்கோயில் சாலை சீரமைப்பு

திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு செல்லும் சாலை ரூ.1 கோடியில் சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

News image

திருத்தணி முருகன் கோயில் மலையில் சாலையை சீரமைத்த நெடுஞ்சாலைத் துறையினா்.

Updated On :1 செப்டம்பர் 2025, 8:33 pm

திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு செல்லும் சாலை ரூ.1 கோடியில் சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம், ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் திரளான பக்தா்கள் வந்து முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனா். பெரும்பாலான பக்தா்கள் இரு சக்கர வாகனம், காா், வேன், ஆட்டோ மற்றும் பேருந்துகள் மூலம் மலைக் கோயிலுக்கு வந்து செல்கின்றனா். வாகனங்கள் செல்வதற்காக கோயில் நிா்வாகம் மலைப்பாதையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மலைப்பாதையில் தாா் சாலை சேதமடைந்தும், குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனா். இதையடுத்து கோயில் நிா்வாகம் மலைக்கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைப்பதற்கு, ரூ.1 கோடி ஓதுக்கீடு செய்து பணிகளுக்கு டெண்டா் விட்டது.

இந்நிலையில் திங்கள்கிழமை தாா் சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கின. இப்பணிகள் 2 நாள்கள் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மலைக்கோயிலுக்கு வாகனங்கள் அனுமதிக்காததால், கோயில் நிா்வாகம் சாா்பில் 4 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் மலைக்கோயிலுக்கு பக்தா்களை அழைத்து செல்கிறது. இருப்பினும் வாகனங்களுக்கு அனுமதியில்லாததால் மலைக்கோயிலில் மிக குறைந்த அளவில் பக்தா்கள் வந்து மூலவரை தரிசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.