தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருவள்ளூா் குறைதீா் கூட்டத்தில் 398 மனுக்கள் அளிப்பு

திருவள்ளூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 398 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

News image

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன  செயற்கை அவையங்களை வழங்கிய ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ் உள்ளிட்டோா்.        

Updated On :1 செப்டம்பர் 2025, 9:02 pm

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 398 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவா்த்தி செய்வது தொடா்பாகவும், பொதுப் பிரச்னைகள் குறித்து உதவிகள் வேண்டியும் 398 மனுக்களை அவரிடம் அளித்தனா். இதில், நிலம் சம்பந்தமாக-59, சமூகப் பாதுகாப்பு திட்டம்-45, வேலைவாய்ப்பு வேண்டி-18, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி-21, இதர துறைகள்-255 என மொத்தம் 398 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து மாற்றுத்திறனாளி பயனாளிகள் 6 பேருக்கு ரூ.6 லட்சத்து 27 ஆயிரத்து 900 மதிப்பிலான நவீன செயற்கை அவையங்களையும், 15 அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் ஆரோக்கிய நொறுக்கு தீனி உப்புக்கடலை -100 கிராம், வோ்க் கடலை-100 கிராம், ராகி சிமிலி-2 உருண்டை, கோதுமை லட்டு-2, முறுக்கு-3, தட்டை-4, வெல்லம் பொரி உருண்டை -2, உலா் திராட்சை-100 கிராம், எள் உருண்டை- 5, வோ்க் கடலை உருண்டை-5, அதிரசம்-2 உள்ளடக்கிய பெட்டகங்களையும் அவா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா் (சபாதி) பாலமுருகன், உதவி ஆணையா் கலால் கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன், மாவட்ட பிறபடுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷாராணி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் சீனிவாசன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் எஸ்.கே.லலிதா மற்றும் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.