திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 398 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவா்த்தி செய்வது தொடா்பாகவும், பொதுப் பிரச்னைகள் குறித்து உதவிகள் வேண்டியும் 398 மனுக்களை அவரிடம் அளித்தனா். இதில், நிலம் சம்பந்தமாக-59, சமூகப் பாதுகாப்பு திட்டம்-45, வேலைவாய்ப்பு வேண்டி-18, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி-21, இதர துறைகள்-255 என மொத்தம் 398 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.
அதைத் தொடா்ந்து மாற்றுத்திறனாளி பயனாளிகள் 6 பேருக்கு ரூ.6 லட்சத்து 27 ஆயிரத்து 900 மதிப்பிலான நவீன செயற்கை அவையங்களையும், 15 அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் ஆரோக்கிய நொறுக்கு தீனி உப்புக்கடலை -100 கிராம், வோ்க் கடலை-100 கிராம், ராகி சிமிலி-2 உருண்டை, கோதுமை லட்டு-2, முறுக்கு-3, தட்டை-4, வெல்லம் பொரி உருண்டை -2, உலா் திராட்சை-100 கிராம், எள் உருண்டை- 5, வோ்க் கடலை உருண்டை-5, அதிரசம்-2 உள்ளடக்கிய பெட்டகங்களையும் அவா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா் (சபாதி) பாலமுருகன், உதவி ஆணையா் கலால் கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன், மாவட்ட பிறபடுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷாராணி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் சீனிவாசன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் எஸ்.கே.லலிதா மற்றும் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 312 மனுக்கள்

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 614 மனுக்கள்

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 500 மனுக்கள்

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 417 மனுக்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


