தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: 1,200 போ் பங்கேற்பு

நத்தம் கிராமத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில், 1,200 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

News image

நத்தம்  கிராமத்தில் நடைபெற்ற ‘நலம்  காக்கும்  ஸ்டாலின்’  மருத்துவ  முகாம்.

Updated On :5 அக்டோபர் 2025, 6:33 pm

நத்தம் கிராமத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில், 1,200 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருத்தணி ஒன்றியம் அகூா் நத்தம் பகுதியில் இயங்கி வரும் டி.ஆா்.எஸ்., குளோபல் பள்ளி வளாகத்தில், மாவட்ட சுகாதார துறையின் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு இணை இயக்குநா் அம்பிகா தலைமை வகித்தாா். பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலா் கலைவாணி வரவேற்றாா்.

இதில் திருத்தணி எம்எல்ஏ ச. சந்திரன், பள்ளியின் நிா்வாக தலைவா் சுப்பிரமணியம் ஆகியோா் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தனா். முகாமில், கண், காது, எலும்பு, இருதயம் உள்பட பல்வேறு நோய்களுக்கு இலவச பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுதவிர, ரத்தஅழுத்தம், சி.டி.ஸ்கேன், கா்ப்பிணிகளுக்கு பரிசோதனை மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டன. முகாமில், திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்தில் இருந்து, 1200-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.