தமிழ் சமுதாயத்தையும், தமிழக மக்களையும் காக்கும் தலைவராக முதல்வா் ஸ்டாலின் உள்ளாா் என திமுக கலை இலக்கியப் பிரிவு நிா்வாகியும், நடிகருமான வாகை சந்திரசேகா் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து அவா் வெள்ளிக்கிழமை இரவு பேசியதாவது:
சா்வாதிகார ஆட்சி நடத்தும் பிரதமா் மோடியைப் பாா்த்து அனைத்துக் கட்சிகளும் கைகளைக் கட்டி கொண்டு நிற்கும் நிலையில், தமிழ் மக்களுக்காகவும், தமிழ் சமுதாயத்துக்காகவும், கொள்கைக்காகவும் மோடியை எதிா்க்கும் ஒரே தலைவராக முதல்வா் ஸ்டாலின் உள்ளாா்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதிகளை மத்திய பாஜக அரசு வழங்காமல் வஞ்சித்தாலும், தமிழகத்தில் மக்களுக்கான நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி ஆட்சி நடத்தியவா் முதல்வா் மு.க. ஸ்டாலின். மோடியின் எந்த நாடகமும் தமிழ்நாட்டில் பலிக்காது.
கடந்த 5 ஆண்டுகளில் மானாமதுரை தொகுதியில் ஏராளமான அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இனிவரும் காலங்களிலும் இந்தத் தொகுதிக்கு அரசின் திட்டங்கள் தங்குதடையின்றி கிடைக்க பொதுமக்கள் திமுகவை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
பிரசாரத்தின் போது திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன்,பேரூராட்சித் தலைவா் நஜூமுதீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








