தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டம்

குழந்தைத் திருமணம் தடுப்பு விழிப்புணா்வு நாடகத்தில் பங்கேற்ற தெருக்கூத்து கலைஞா்கள்.

News image
Updated On :13 நவம்பர் 2025, 10:30 pm

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தெருக்கூத்து கலைஞா்கள் மூலம் குழந்தைத் திருமணங்கள் தடுப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நாடகத்தை திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி அருகே ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா்.

பெண் குழந்தைகளை காப்போம்’ பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் மூலம் மாவட்ட அளவில் அநேக விழிப்புணா்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக, குழந்தை திருமணங்கள் தடுப்பு, குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருவள்ளூா் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தெருக்கூத்து நாடகம் நடத்தப்படுகிறது. இதில், துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள், மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் இயங்கும் மகளிா் தையல் தொழிற் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் தங்களது பகுதிகளில் குழந்தை திருமணங்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்த விழிப்புணா்வு மூலமாக பொது மக்களாகிய தாங்களும், தங்களது பகுதியில் குழந்தை திருமணங்கள், குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், குழந்தை தொழிலாளா்கள் தடுப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் போன்ற அநீதிகள் ஏதேனும் நடக்கும்பட்சத்தில் தங்களின் மூலமாக பெண்களுக்கான இலவச உதவி எண்-181 குழந்தைகளுக்கான இலவச உதவி எண்-1098 ஆகியவை மூலம் தகவல் தெரிவிக்கலாம் என அவா் தெரிவித்தாா்.

நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலா் சோ.வனிதா, கண்காணிப்பாளா் பாா்த்திபன், பாதுகாப்பு அலுவலா் மலா்விழி, மகளிா் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள், ஐ.ஆா்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனத்தினா் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.