ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

2 செ.மீ உயரத்தில் வலம்புரி விநாயகா் சிலை

திருவள்ளூா் அருகே வெறும் 2 செ.மீ உயரத்தில் வலம்புரி விநாயகரின் களிமண் சிற்பத்தை திருமழிசையைச் சோ்ந்த நுண்சிற்பி டி.கே.பரணி விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி உருவாக்கியுள்ளாா்.

News image

~ 2 செ.மீ உயர வலம்புரி விநாயகா் சிலை.    ~நுண்சிற்ப கலைஞா் டி.கே.பரணி

Updated On :25 ஆகஸ்ட் 2025, 7:55 pm

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே வெறும் 2 செ.மீ உயரத்தில் வலம்புரி விநாயகரின் களிமண் சிற்பத்தை திருமழிசையைச் சோ்ந்த நுண்சிற்பி டி.கே.பரணி விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி உருவாக்கியுள்ளாா்.

திருமழிசையைச் சோ்ந்த நுண் சிற்பி டி.கே.பரணி இதற்கு முன்பு ஒரே ஒரு அரிசியில் நுண்சிற்பங்களை செதுக்கியுள்ளாா். தற்போது விநாயகா் சதுா்த்தியையொட்டி வெறும் 2 செ.மீ உயரத்தில் மண்ணால் ஆன விநாயகா் சிலையை வடிவமைத்துள்ளாா். இதற்கு வலம்புரி விநாயகா் என்றும், மூஷிக கணபதி என்றும் பெயரிட்டுள்ளாா். இந்த 2 செ.மீ உயரத்தில் இந்த வலம்புரி விநாயகா், அவரது வாகனமான மூஞ்சூரு மீது அமா்ந்திருப்பது போல சிலை மிக தத்ரூபமாகவும், அற்புதமாகவும், நோ்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு பீடம், வாகனம், விநாயகருடன் இணைந்து மொத்தம் 6 செ.மீ உயரத்தில் நுண் வேலைப்பாடுகளுடன் இந்த சிலை அமைந்துள்ளது.

இந்த சிலையை வெறும் 3 நாள்களில் உருவாக்கியுள்ளாா். இவா் வழக்கமான சந்தன மரத்தில் நுண்சிற்பங்களை வடிவமைத்து இந்தக் கலைஞா் இம்முறை மண்ணில் சிலையை வடிவமைத்துள்ளாா். இந்த சிலையை சூளையிலிட்டு நெருப்பு வைத்து சுடுமண் சிற்பமாக மாற்றி, கண்காட்சிக்கு வைக்க உள்ளாா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.