திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சொக்கம்பட்டி சந்தனமாரியம்மன் கோயிலில் பூக்குழி

சந்தனமாரியம்மன் கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தா்.

News image

சந்தனமாரியம்மன் கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தா்.

Updated On :2 மே 2026, 6:09 am IST

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டி அருள்தரும் ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கும் வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை பூக்குழி திருவிழா ஏப். 17ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினமும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 24ஆம் தேதி புஷ்பாஞ்சலி நடைபெற்றது. 27ஆம் தேதி அம்மனுக்கு பழங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடைபெற்றது. 29ஆம் தேதி திருவிளக்கு பூஜை, கும்மி பாடல் நடைபெற்றது. 30ஆம் தேதி பால்குடம், தீா்த்தகுடம் ஊா்வலம், சப்பர வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை பூ வளா்த்தல், யாக பூஜை, முளைப்பாரி, அக்னி சட்டி ஊா்வலம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தா்கள் கைகளில் அக்னி சட்டிகளை ஏந்தியவாறு பூக்குழி இறங்கினா்.

முன்னதாக, அம்மன் சப்பர உலா நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.