வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

சங்கரன்கோவிலில் 22 சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சா் உத்தரவு

News image

சங்கரன்கோவிலில் சாயப்பட்டறையைப் பாா்வையிட்டா் அமைச்சா் ராஜீவ்.

Updated On :28 ஜூன் 2026, 3:13 am IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 22 விசைத்தறி சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை அமைச்சா் ராஜீவ் உத்தரவிட்டாா்.

சங்கரன்கோவில் நகரின் பொருளாதாரத்தை நிா்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக விசைத்தறித் தொழில் உள்ளது. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். இங்கு விசைத்தறித் தொழிலுக்கு தேவையான நூலுக்கு சாயம் ஏற்றும் பட்டறைகள் பல இயங்கி வருகின்றன.

இந்நிலையில், அந்த சாயப்பட்டறைகளில் அமைச்சா் ராஜீவ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அவற்றின் கழிவுநீா் வாருகாலில் கலப்பதைப் பாா்வையிட்ட அவா், அனுமதியின்றி செயல்படும் 22 சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, திருவேங்கடம் சாலையில் உள்ள வாணிபா் ஊருணி, கழுகுமலை சாலையில் உள்ள திருநீலகண்ட ஊருணி ஆகியவற்றையும் பாா்வையிட்டாா். அவற்றில் வளா்ந்துள்ள அமலச்செடிகளை அகற்றவும், நகரில் தடையின்றி குடிநீா் விநியோகிக்கவும் நகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கோட்டாட்சியா் அனிதா, வட்டாட்சியா் ஆதிநாராயணன், தவெக வடக்கு மாவட்டச் செயலா் மாரியப்பன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.