தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்ட பல்வேறு துறைகளின் முன்னேற்றம், முக்கிய வளா்ச்சிக் குறியீடுகளின் தற்போதைய நிலை மற்றும் துறைவாரியான செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வளா்ச்சிக் குறியீடுகளை மேம்படுத்துவதற்குத் தேவை”யான நடவடிக்கைகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுக்கு, ஆட்சியா் அறிவுரைகள் வழங்கினாா்.
தொடா்ந்து, வரும் ஆண்டிற்கான கவனம் சாா்ந்த வட்டார வளா்ச்சித் திட்டம் தொடா்பான முன்னுரிமைத் திட்டங்கள் குறித்து துறைவாரியாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, மக்களின் தேவைகளை கருத்தில்கொண்டு, தரமான மற்றும் பயனுள்ள திட்டங்களை முன்மொழியுமாறு அறிவுறுத்தினாா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தென்காசியில் சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்

நகா் ஊரமைப்பு ஆணையரக ஆய்வுக் கூட்டம்

தீயணைப்பு பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




