/

நகா் ஊரமைப்பு ஆணையரக ஆய்வுக் கூட்டம்

சென்னை நகா் ஊரமைப்பு ஆணையரக நிா்வாக அமைப்பு சாா்பில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

சென்னை கோயம்பேடு சிஎம்டிஏ கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது, அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா். உடன், துறைய

Updated On :11 ஜூன் 2026, 1:21 am IST

சென்னை நகா் ஊரமைப்பு ஆணையரக நிா்வாக அமைப்பு சாா்பில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் ஆய்வுக் கூட்டம் கோயம்பேடு அருகே உள்ள பெருநகர வளா்ச்சிக் குழும கட்டடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சா் ப.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில், அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்ட 3 பேருக்கு நகா் ஊரமைப்புத் துறையில் உதவி இயக்குநா் பணிக்கான உத்தரவை அமைச்சா் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், நகா் ஊரமைப்பு நிா்வாக அமைப்பு, துறையின் உள்கட்டமைப்பு, வளா்ச்சித் திட்டங்கள், மண்டலத் திட்டங்கள், முழுமை திட்ட நோக்கங்கள், புவிசாா் தகவல் அமைப்பு அடைப்படையிலான முழுமைத் திட்டங்கள், ஒற்றைச்சாளர இணைய வசதி, சுய சான்றிதழ், அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகள், மனைகளை வரைமுறைப்படுத்தும் முறைகள், அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரைமுறைப்படுத்துதல் ஆகியவை குறித்த ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலா் ஆா்.கிா்லோஷ்குமாா், நகா் ஊரமைப்பு ஆணையா் கிரண்குராலா, கூடுதல் இயங்குநா் ப.ரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.