/

வாசுதேவநல்லூா் ஊருணியில் முதியவா் சடலம் மீட்பு

வாசுதேவநல்லூா் ஊருணியில் மிதந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 6:35 pm

Syndication

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் ஊருணியில் மிதந்த முதியவா் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

வாசுதேவநல்லூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஊருணியில் ஆண் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாரும், தீயணைப்பு நிலையத்தினரும் சென்று சடலத்தை மீட்டனா்.

இறந்துகிடந்தவா் வாசுதேவநல்லூா் மேல ரத வீதியைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் இசக்கி(86) எனத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.