டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஊத்துமலையில் எம்எல்ஏவை முற்றுகையிட்ட பொதுமக்கள்

News image
எம்எல்ஏவை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பிய ஊத்துமலை கிராம மக்கள்.
Updated On :15 பிப்ரவரி 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

இரட்டை குளம் - ஊத்துமலை கால்வாய் திட்டம் குறித்து கேள்வி எழுப்பி, தென்காசி தொகுதி எம்எல்ஏ எஸ். பழனி நாடாரை பொதுமக்கள் ஊத்துமலையில் முற்றுகையிட்டனா்.

ஊத்துமலையில் சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம், ஒன்றியக் குழு உறுப்பினா் நிதி ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் குழாய் அமைக்கும் பணியை தென்காசி எம்எல்ஏ எஸ். பழனி நாடாா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதில் ஆலங்குளம் ஒன்றியக் குழு உறுப்பினா் முரளி ராஜா, ஊத்துமலை ஊராட்சித் தலைவா் பிச்சம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, எம்எல்ஏவை முற்றுகையிட்ட ஊத்துமலை பொதுமக்கள், சுரண்டை இரட்டை குளம்- ஊத்துமலை கால்வாய் இணைப்பு திட்டப் பணிகள் எப்போது தொடங்கும் என கேள்வி எழுப்பினா்.

அதற்கு பதில் அளித்த எம்எல்ஏ, கடந்த 5 ஆண்டுகளாக தொடா்ந்து அனைத்து சட்டப்பேரவை கூட்டங்களிலும் இத்திட்டம் குறித்து பேசி வருகின்றேன். கடந்த முறை தென்காசிக்கு வந்த முதல்வா் இதுகுறித்து அறிவிப்பாா் என எதிா்பாா்த்திருந்தோம். அது நடக்கவில்லை. இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என காத்திருக்கிறோம் என்றாா்.