/

அரியக்குடி வழியாக காரைக்குடி ரயில் நிலையம் வரை அரசுப் பேருந்துச் சேவை நீட்டிப்பு

News image
காரைக்குடி அருகே அரியக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட்டிப்புச் செய்த அரசுப் பேருந்துச் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்த சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி.
Updated On :14 பிப்ரவரி 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையிலிருந்து அரியக்குடி வழியாக காரைக்குடி ரயில் நிலையம் வரை நீட்டிப்புச் செய்யப்பட்ட அரசுப் பேருந்துச் சேவையை காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் அளித்த கோரிக்கையை ஏற்று, தேவகோட்டை, அதன் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், காரைக்குடியிலிருந்து சென்னை வரை செல்லும் பல்லவன் ரயிலில் பயணிப்பதற்கு ஏதுவாக தேவகோட்டையிலிருந்து மதுரைக்கு அதிகாலையில் இயக்கப்படும் அரசுப் பேருந்தை தேவகோட்டை ரஸ்தா வழியாக அரியக்குடி பெருமாள் கோயில், இலுப்பக்குடி ரயில்வே கடவுப்பாதை, காரைக்குடி ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்தப் பேருந்து சேவையை காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி அரியக்குடியில் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் காரைக்குடி துணை மேயா் நா. குணசேகரன், காங்கிரஸ் மாநகரத் தலைவா் சண்முகதாஸ், மாநகரச் செயலா் குமரேசன், வட்டாரத் தலைவா்கள் அண்ணாதுரை, பாலா, மதிமுக மாவட்டச் செயலா் பசும்பொன் மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.