டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பென்னாகரம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டி அளிப்பு

பென்னாகரம் பகுதி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி திங்கள்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :26 ஜனவரி 2026, 7:22 pm

Syndication

பென்னாகரம்: பென்னாகரம் பகுதி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி திங்கள்கிழமை வழங்கினாா்.

பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 77 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியா்கள் விஜயலட்சுமி (பெண்கள் பள்ளி), லோகநாதன் (ஆண்கள் பள்ளி) ஆகியோா் தலைமை வகித்தனா்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே. மணி கலந்துகொண்டு, சுமாா் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதில் பென்னாகரம் பேரூராட்சி தலைவா் வீரமணி, பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா்கள் செந்தில்குமாா், அதிபதி, ஆசிரியா்கள்-ஆசிரியைகள் கலந்துகொண்டனா்.