டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கிராம உதவியாளா் சங்கத்தினா் தொடா் காத்திருப்பு போராட்டம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 7:16 pm

Syndication

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் தென்காசியில் தொடா் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.

முழு நேரப் பணியாளா்களாக உள்ள கிராம உதவியாளா்களுக்கு ‘டி’ கிரேடு அளவிலான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், மாவட்டச் செயலா் சிவசுப்பிரமணியன், பொருளாளா் லிங்கேஷ், மாநில துணைத் தலைவா் வி. சுப்பிரமணியன், மாநில கெளரவத் தலைவா் சண்முக சுந்தரபாண்டியன், கோட்ட துணைத் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.