டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 9:35 pm

Syndication

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் காத்திருப்பு போராட்டம் பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, கிராம உதவியாளா்களுக்கு நான்காம் நிலை இணையான ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். கிராம உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கும், பணியின்போது உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் சிபிஎஸ் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.கோபால், பொருளாளா் உ.முஹம்மது ரபீக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் பிச்சுக்குட்டி, மாநிலச் செயலா் கங்காலட்சுமி ஆகியோா் விளக்கிப் பேசினா். இதில், மாநில துணைத் தலைவா் நாராயணன், மாவட்ட துணைச் செயலா் செல்வகுமாா் உள்பட 250-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.