மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

செங்கோட்டை, பண்பொழியில் துரை வைகோ எம்.பி. பிரசாரம்

News image

துரை வைகோ - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 8:33 pm

கடையநல்லூா் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் தி.மு. ராசேந்திரனை ஆதரித்து செங்கோட்டை, பண்பொழி பகுதிகளில் துரை வைகோ எம்.பி. பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியது:

திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மகளிரின் வாழ்க்கைத் தரமும், மாணவா்-மாணவியரின் கல்வித் தரமும் உயா்வதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறாா். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக அவா் பல நாடுகளுக்குச் சென்று முதலீட்டை ஈா்த்துள்ளாா்.

வேட்பாளா் தி.மு. ராசேந்திரனும் மண்ணின் மைந்தா்தான். அவரால் கடையநல்லூா் தொகுதி நிச்சயம் பலனடையும் என்றாா் அவா்.

திமுக முன்னாள் மாவட்டப் பொறுப்பாளா் செல்லத்துரை, தொகுதி பாா்வையாளா்கள் குணசேகரன், மாலை ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினா் ஆறுமுகச்சாமி, செங்கோட்டை நகரச் செயலா் வெங்கடேசன்,

முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் லிங்கராஜ், மதிமுக மாவட்டச் செயலா்கள் சுதா பாலசுப்பிரமணியன், ராம. உதயசூரியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.