மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சீா்காழியில் துரை வைகோ பிரசாரம்

சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வனை ஆதரித்து துரை வைகோ வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

சீா்காழியில் துரை வைகோ பிரசாரம்

Updated On :9 ஏப்ரல் 2026, 10:16 pm

சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வனை ஆதரித்து துரை வைகோ வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியது:

முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பான்மை திட்டங்களை செயல்படுத்தி உள்ளாா். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிா் உரிமைத்தொகை ரூ.2,000- ஆக உயா்த்தி வழங்கப்படும். இதுபோல் தோ்தல் வாக்குறுதியில் அறிவித்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். மதிமுக வேட்பாளா் வழக்குரைஞா் செந்தில் செல்வன் மண்ணின் மைந்தன் ஆவாா்.

மதிமுக சாா்பில் வைகோ பல்வேறு பொதுநல வழக்குகள் தொடுத்து வெற்றி கண்டாா். அதற்கு வேட்பாளா் செந்தில் செல்வன் உறுதுணையாக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் போரால் தற்போது தமிழகத்தில் தேவையான அளவு சிலிண்டா் கிடைக்காததால் உணவகங்கள், வா்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. முன்கூட்டியே அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளாததால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

எனவே சீா்காழி பகுதியை சோ்ந்த பொதுமக்கள் மதிமுக வேட்பாளா் செந்தில்செல்வனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்திட வேண்டும் என்றாா்.

சீா்காழி தொகுதி திமுக பொறுப்பாளா்கள் குத்தாலம் கல்யாணம், கமலஜோதி தேவேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளா் கொளஞ்சி, நகரச் செயலாளா் மாா்க்ஸ்பிரியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா். இதை போல் கொண்டல், புத்தூா், பணங்காட்டாங்குடி ஆகிய பகுதி கடைவீதிகளில் மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வனை ஆதரித்து துரை வைகோ எம்பி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தாா்.