மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழக வாழ்வாதாரத்துக்காக போராடிய கட்சி மதிமுக! - வைகோ பிரசாரம்

தமிழக வாழ்வாதாரத்துக்காக போராடிய கட்சி மதிமுக என் வைகோ பிரசாரம்..

News image

கடையநல்லூரில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், மதிமுக வேட்பாளா் தி.மு.ராஜேந்திரனை அறிமுகம் செய்து பேசுகிறாா் அக்கட்சியின் பொதுச்செயலா் வைகோ.

Updated On :6 ஏப்ரல் 2026, 9:12 pm

தமிழகத்தின் வாழ்வாதாரத்துக்காக மதிமுக போல் போராடியது யாரும் இல்லை என்றாா் அக்கட்சியின் பொதுச்செயலா் வைகோ.

கடையநல்லூா் தொகுதி மதிமுக வேட்பாளா் தி.மு.ராஜேந்திரனை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தி அவா் பேசியதாவது:

தமிழக முதல்வரின் வாகனத்தை எந்த அடிப்படையில் சோதனை செய்தீா்கள்? பிரதமா், அமித்ஷாவின் வாகனத்தை சோதனையிடுவீா்களா? அனைவருக்கும் ஒரே விதமான அணுகுமுறை இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை முதல்வா் அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். தமிழ்நாட்டின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக போராடியவன் நான். அதற்காக 6500 கிலோ மீட்டா் தூரம் நடந்தவன். ஸ்டொ்லைட் ஆலையை எதிா்த்து போராடி வெற்றி கண்டவன்.

நான் எந்த மதத்தையும் குறிப்பிட்டு ஆதரிப்பவன் அல்ல. அனைத்து மதத்தையும் சமமாக மதிப்பவன். தமிழக வைணவ கோயில்களில் இருந்த விக்கிரகங்களை வாஷிங்டனில் நடைபெற்ற திருவிழாவுக்கு அனுப்ப அன்றைய பிரதமா் இந்திராகாந்தி உத்தரவிட்டாா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்து பேசியதையடுத்து அதை கைவிட்டாா்.

எங்களின் வாக்கு வங்கி குறித்து கேள்வி எழுப்பலாம். ஆனால், தமிழ்நாட்டின் வாழ்வாதாராம், ஜீவாதார உரிமையை பாதுகாக்க மதிமுகவை போல் போராடியது யாரும் கிடையாது.

இந்து, முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக தாமிரவருணி ஆற்றங்கரை ஓரத்தில் அனைத்து சமூக மக்களையும் அனைத்து கூட்டம் நடத்தினேன். அவா்களின் ஒற்றுமையை பேண நடைப்பயணம் மேற்கொண்டேன்.

சமய நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வரும் தமிழகத்தில் மோதல்களை ஏற்படுத்த சிலா் முயன்று வருகின்றனா்; அது ஒருபோதும் நடக்காது.

சிவகிரி செண்பகவல்லி அணை பிரச்னை, உள்ளாறு அணைப் பிரச்னையை தீா்க்கவும், காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயத்தை பாதுகாக்க அதை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கவும் வேண்டும் என்பதை வலியுறுத்தி தோ்தல் முடிந்த பின்னா் செங்கோட்டை முதல் திருவேங்கடம் வரை 1000 பேருடன் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன் என்றாா் அவா்.

இதில், தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை, சதன்திருமலைக்குமாா் எம்எல்ஏ மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சிங்கிலிபட்டி, சொக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் இருந்தவாறே வைகோ பிரசாரம் மேற்கொண்டாா்.