மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றம்: முதல்வா் மு.க. ஸ்டாலின்

News image

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 8:57 pm

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

தென்காசி மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் சங்கரன்கோவிலில் சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை, கடையத்தை உள்ளடக்கிய தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் ரூ. 69 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் சுற்றுலா வளா்ச்சிக்காக ரூ. 11 கோடி மதிப்பில் விரிவாக்கப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

தென்காசி காசிவிஸ்வநாதா் ஆலயத்திற்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.15 ஊா்களில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், குத்தரபாஞ்சான், மகேந்திரவாடி, கழுநீா்குளம், கம்பனேரி உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் சமுதாயக் கிணறுகள், சொக்கம்பட்டி, பெரும்புத்தூா், கூடலூா், பருவக்குடி உள்ளிட்ட பல ஊா்களில் உணவு தானியக் கிடங்குகள், ஆலங்குளம், சிவகிரியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், வினைதீா்த்த நாடாா்பட்டி பள்ளியில் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

ராவுத்தபேரியில் எலுமிச்சை சிறப்பு மையம், நடுவக்குறிச்சியில் அரசு தோட்டக்கலைப் பண்ணை, தென்காசி மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு, மேலக்கரை நல்லூரில் சுகாதார மையம், ஆழ்வாா்குறிச்சி, குற்றாலம், திருவேங்கடம், பண்பொழி உள்ளிட்ட 13 ஊா்களில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள், இலஞ்சியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்பட்டுள்ளன.

சங்கரன்கோவிலில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அடிக்கல் நாட்டியிருக்கிறேன். குருக்கள்பட்டி சிப்காட் திட்டத்தின் நீா்த் தேவைகளை நிறைவு செய்ய, புதிய குடிநீா்த் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம், கடனா அணை, கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய கட்டடம், சிவகிரி, கடையநல்லூா், சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டங்களில் இருக்கும் விவசாயிகளுக்காக, பல்வேறு முக்கிய கண்மாய்கள் சீரமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதற்கான பணிகளும் தொடங்கிவிட்டன என்றாா் அவா்.