திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மு.க. ஸ்டாலினுடன் சேர்ந்து இபிஎஸ் ஆட்சியமைக்க முயன்றதாலேயே அதிமுகவில் பிரச்னை: நிர்மல்குமார்

திமுகவுடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியமைக்க முயற்சித்ததாலேயே அதிமுகவில் பிரச்னை உண்டானதாக அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு

News image

மு.க. ஸ்டாலின் | எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 11:01 am IST

திமுகவுடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியமைக்க முயற்சித்ததாலேயே அதிமுகவில் பிரச்னை உண்டானதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது, "ஆளுநர் மாளிகையின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடாமல், வந்தே மாதரம் பாடப்படுவது கண்டனத்துக்குரியது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், மேற்கு வங்கத்தில் மட்டும் மாற்றிப் பாடினார்கள். அவர்களுக்கு எங்கெல்லாம் அரசியல் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் அரசியல் செய்கின்றனர்.

தமிழகத்தில் ஆளுநர் மாளிகையாக இருந்தாலும் சரி, ஆளுநர் தொடர்பான இடங்களில் நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதன்மையாகப் பாடப்பட வேண்டும்.

இதுதான் எங்களின் முதன்மையான கோரிக்கை. இதனைச் செவிசாய்த்து பிரதமரும், மத்திய அரசும் மாற்றுவார்கள்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, அதிமுக தலைவர்கள் சிலர் தவெகவில் இணைந்தது குறித்து அவர் பேசியதாவது, "அதிமுகவின் கட்சியினுள் தனிப்பட்ட காரணங்களால், கட்சியில் தொடர முடியாத சூழல் ஏற்பட்டதால், அங்கிருந்து விலகி ராஜிநாமா செய்தபிறகுதான், தவெக தலைவர்களைச் சந்தித்தனர். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.

எடப்பாடி பழனிசாமியும் மு.க. ஸ்டாலினும் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டும் என்று அவர்கள் எப்போது தொடங்கினார்களோ அப்போதுதான் பிரச்னையும் உண்டானது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் திமுகவுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டு, திமுகவுக்கு எதிராக அரசியல் செய்தவர்கள். ஆனால், இப்போது திமுகவுடன் சேர்ந்தே ஆட்சியமைக்க வேண்டிய சூழ்நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டதால், அதனை எதிர்த்து சிலர் வெளிவந்தனர்" என்றும் நிர்மல்குமார் தெரிவித்தார்.

Summary

The trouble within the AIADMK arose precisely because Edappadi Palaniswami attempted to form a government in alliance with MK Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.