திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அதிமுகவா? தவெகவா? மக்களின் முடிவே என் முடிவு! - சி. விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேட்டி...

News image

இலுப்பூரிலுள்ள தனது இல்லத்தில் கட்சியினரைச் சந்தித்து கருத்து கேட்ட முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர். - DIN

Updated On :28 மே 2026, 3:14 pm IST

தொகுதி மக்களின் முடிவே தன் முடிவு என்றும் அவர்களின் கருத்தைக் கேட்பது முக்கியம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலி மலை தொகுதி எம்எல்ஏவுமான சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"தொகுதி மக்கள் என்ன விரும்புகிறார்களோ, நான் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, எனக்காக, கட்சிக்காக உழைத்தவர்கள், கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆகியோர் என்ன சொல்கிறார்களோ அதனடிப்படையில் எனது முடிவு இருக்கும்.

என்னை நம்பி வாக்களித்த விராலி மலை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், அந்த மக்களுக்கு நான் நன்றியுடன் இருப்பேன். அவர்களின் கருத்துகளை எல்லாம் கேட்டுதான் முடிவு செய்ய முடியும். மக்கள் கருத்தைக் கேட்காமல் நான் முடிவெடுக்க முடியாது.

இன்று காலை அனைத்துத் தரப்பு நிர்வாகிகளையும் சந்தித்தேன். அவர்களின் கருத்துகளைக் கேட்டிருக்கிறேன். யூகங்களுக்கு என்னிடம் பதில் இல்லை" என்று கூறினார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி, எஸ்.பி. வேலுமணி என இரண்டாகப் பிரிந்த நிலையில் தற்போது மீண்டும் இரு அணிகளும் இணைந்துள்ளது. ஆனால் வேலுமணி அணியில் இருந்த சி. விஜயபாஸ்கரும் சி.வி. சண்முகமும் இன்னும் பழனிசாமியைச் சந்திக்கவில்லை. சி. விஜயபாஸ்கர் தவெகவில் இனைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Summary

Decision of the constituencys people is my decision: C. Vijayabaskar press meet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.