சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று வீசியதால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
சென்னையில் விமான நிலையம் உள்ள மீனம்பாக்கம், மெரீனா உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று காலை சூறைக்காற்று வீசியது.
இதனால் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன, தரையிறங்கின.
சென்னை மீனம்பாக்கம் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதால் 10 விமானங்கள் தாமதம்
ஹைதராபாத்தில் இருந்து வந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திருப்பதிக்குச் சென்றது. அதேபோல துபை, அபுதாபியில் இருந்து வந்த விமானங்கள் சூறைக்காற்றால் சென்னையில் தாமதமாக தரையிறங்கின.
சென்னையில் இருந்து தில்லி, கொல்கத்தா, பெங்களூரு, கோவை, மதுரைக்குச் செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
Summary
Gale-force winds in Chennai: Flights delayed
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










