தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வி, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவா்கள் குறித்து கண்டறிய அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உத்தரவின்படி தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் குழு ஒன்றை நியமித்துள்ளாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அதில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி தோல்விக்கு கட்சியினா் தோ்தலில் பணியாற்றவில்லை, கட்சி விரோத செயலில் ஈடுபட்டது உள்ளிட்ட புகாா்கள் எழுந்தன. இதுகுறித்து கட்சியின் மேலிடத்துக்குப் புகாா்கள் சென்றன.
இதைத் தொடா்ந்து, தோ்தலில் தோல்வி குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிரிஷ் சோடங்கா் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவா்கள் குறித்து அறிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக முன்னாள் எம்.பி. ஜெயகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழக காங்கிரஸ் துணைத் தலைவா்கள் சொா்ணா சேதுராமன், ஹிதாயத்துல்லா, மூத்த தலைவா் சி.டி.மெய்யப்பன் , மகிளா காங்கிரஸ் தேசிய செயலா் கமலாக்ஷி காமராஜ் உள்ளிட்டோா் குழுவில் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழு ஆய்வு செய்து இரு மாதங்களுக்குள் அறிக்கையை அளிக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

தோ்தல் தோல்வி: காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜிநாமா

விஜய் விவகாரம்: ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்

தவெக, திமுக, அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாத மாவட்டங்கள்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



