/

முதல்வர் விஜய்யுடன் பேசிய மலேசிய பிரதமர்! செப்டம்பரில் தமிழகம் வருவதாகத் தகவல்!

தமிழக முதல்வர் விஜய்யுடன் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாடியது குறித்து...

News image

தமிழக முதல்வர் விஜய் - மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்... - Instagram/x

Updated On :22 மே 2026, 9:57 pm IST

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்யுடன் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாடியுள்ளார்.

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்யுடன் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று (மே 22) செல்போன் வாயிலாக உரையாடியுள்ளார்.

இந்த உரையாடலில், வரும் செப்டம்பர் மாதம் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருவதாகவும்; வாய்ப்பு கிடைத்தால் தமிழநாட்டுக்கும் வருகை தருவதாகவும் மலேசிய பிரதமர் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“இன்று எனது நண்பர் முதல்வர் விஜய்யுடன் உரையாடி சமீபத்திய விவரங்களைப் பகிர்ந்துக்கொண்டேன். தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் ஏற்றுள்ள இந்தப் பெரும் பொறுப்புக்காக மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டேன்.

இத்துடன், வரும் செப்டம்பர் மாதம் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை மேற்கொள்ள இந்தியா செல்வது குறித்தும், வாய்ப்பு கிடைத்தால் தமிழ்நாட்டுக்கு வருகை தருவேன் எனவும் அவரிடம் நான் தெரிவித்தேன்” எனக் கூறியுள்ளார்.

Summary

Malaysian PM Anwar Ibrahim has spoken with TN CM C. Joseph Vijay over the phone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.