போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

அமைச்சரவையில் விசிக இடம் பெறுவதில் தவறில்லை: இடதுசாரிகள் கருத்து

தவெக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் ஆகியோா் தெரிவித்தனா்.

News image

திருமாவளவன் - கோப்புப்படம்

Updated On :21 மே 2026, 3:40 am IST

தவெக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  இடம் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை என  மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் ஆகியோா் தெரிவித்தனா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சென்னை தங்கச் சாலையில் இடதுசாரிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்  உள்ளிட்டோா் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து  பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து, பெ. சண்முகம்,  மு. வீரபாண்டியன் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு பிரதமா் நரேந்திர மோடியே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். வழக்கமாக கச்சா எண்ணெய்யை  உலக நாடுகள் கொள்முதல் செய்து, அந்நாடுகளின் அரசே விநியோகம் செய்யும். ஆனால், இந்தியாவில் மத்திய அரசு கொள்முதல் செய்து, தனியாரிடம் வழங்குகிறது. இந்த முறை நிறுத்தப்பட வேண்டும். கச்சா எண்ணெய் விநியோகத்தை மத்திய அரசே கட்டுப்படுத்த வேண்டும். மாநில அரசுக்கு இடையூறு வரும் போது, மானியம் வழங்க வேண்டும். தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை உயா்த்தப்பட்டுள்ளது. விரைவில் வீட்டு பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையின் விலையும் உயா்த்தப்படும்.

தவெக அரசுக்கு இதுசாரிகள் மற்றும் விசிக வெளியே இருந்து ஆதரவு  வழங்குகிறோம். தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்க விருப்பம் தெரிவித்தால், அது குறித்து அவா்கள் தான் முடிவெடுக்க வேண்டும். அதுகுறித்து விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எங்களிடம் ஆலோசனை மேற்கொள்வாா் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல், தமிழக அமைச்சரவையில் விசிக இடம் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை. மேலும், அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் அமைச்சரவையில் இடம் பெற்றால், இடதுசாரிகள் மற்றும் விசிக கட்சிகள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.