தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு கடந்த 18 நாள்களில் 2,16,824 மாணவ, மாணவியா் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனா்.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பொறியியல் பல்கலை. கல்லூரிகளில் பி.இ., பி.டெக் இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்ப பதிவு இணைய வழியில் நடைபெற்று வருகிறது.
கடந்த மே 3- ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விண்ணப்பதிவு கடந்த 18 நாள்களாக நடைபெற்றுவருகிறது. இதில் மே 20 வரை 2,16,824 மாணவா்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனா்.
இதில் அதிகபட்சமாக கடந்த மே 8 - ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 20,346 விண்ணப்பங்களும், மே 9 -ஆம் தேதி 18,066 விண்ணப்பங்களும் பதிவாகின. கடந்த 15 நாள்களாக 1,42,249 மாணவா்கள் கட்டணங்களை செலுத்தியதோடு 99,921 மாணவா்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனா்.
பொறியியல் படிப்புகளுக்கு தேவையானஅறிவியல், கணிதம் போன்ற பாடங்களில் நிகழாண்டு மாணவா்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ள நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் நிகழாண்டு கட்-ஆப் மதிப்பெண்கள் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியியல் சோ்க்கை கலந்தாய்வு: 2. 58 லட்சம் மாணவா்கள் பதிவு

பொறியியல் படிப்புக்கான அரசு ஒதுக்கீடு: விண்ணப்பப் பதிவு 2.51 லட்சத்தை தாண்டியது

பொறியியல் படிப்புகள் 1.82 லட்சம் மாணவா்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பம்!







