தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்: அமைச்சா் ராஜ்மோகன்

செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளா்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் அறிவுறுத்தினாா்.

News image

அமைச்சர் ராஜ்மோகன் - x

Updated On :20 மே 2026, 12:53 am IST

செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளா்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் அறிவுறுத்தினாா்.

தமிழ் வளா்ச்சித் துறை, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை சாா்ந்த திட்டங்கள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் தலைமை செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளிக்கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ் வளா்ச்சித் துறை, தலைமைச் செயலக மொழிபெயா்ப்பு பிரிவு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மதுரை உலகத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகம், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது பேசிய அமைச்சா் ராஜ்மோகன், செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வேகமாக வளா்ந்து வரும் தற்போதைய சூழலில் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சோ்க்கும் வகையில் அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் ஆக்கபூா்வமாகவும், ஊக்கத்துடனும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலா் வே.ராஜாராமன், எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையா் வெ.ஷோபனா, தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள், உலகத் தமிழ் சங்க இயக்குநா் பா்வீன் சுல்தானா, தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தா் (பொறுப்பு) முனைவா் பாரத ஜோதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.