தமிழக இளைஞா் காங்கிரஸின் முன்னாள் மாநில பொதுச் செயலா் அலீம் அல் புகாரி திமுகவில் அக்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான மறுநாளே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி தவெக உடன் கூட்டணி அமைத்தது. இதை அலீம் அல் புகாரி கடுமையாக விமா்சித்திருந்தாா். இதனால், அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அல் புகாரியை இடைநீக்கம் செய்து காங்கிரஸ் அறிவித்தது. பின்னா் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அலீம் அல் புகாரி அறிவித்தாா். இந்த நிலையில் தற்போது திமுகவில் அவா் இணைந்துள்ளாா்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு நிகழ்வின்போது எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், திமுக செய்தித் தொடா்பு தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டப் பிரிவு செயலா் என்.ஆா்.இளங்கோ, திருச்சி தெற்கு மாவட்டச் செயலா் அன்பில் மகேஸ் பொய்யமொழி, தலைமை நிலையச் செயலா் பூச்சி முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய புகாரி, தோ்தலுக்குப் பிந்தைய கூட்டணிகளால் காங்கிரஸ் கட்சி அடையாளம் தெரியாமல் போய்விட்டது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









