ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையம் வந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் விஜய் ஆட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள விஜய்யின் ஆட்சி குறித்து தற்போது ஏதும் கூற முடியாது.
6 மாதங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். புதியவர்களை குறைவாக எடை போடக்கூடாது. அதிகமும் எதிர்பார்க்கக்கூடாது. எனக்கும் ரஜினிக்கும் இடையே போட்டி உள்ளது. ஆனால் ஒருபோதும் பொறாமை இருந்ததில்லை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சென்னை - போயஸ் கார்டனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ஒருவேளை கமல்ஹாசன் முதல்வர் ஆகியிருந்தால் எனக்கு அந்த பொறாமை வந்திருக்குமா என்று கூட தெரியாது.
அப்போதும் எனக்கு பொறாமை வந்திருக்காது எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Makkal Needhi Maiam President Kamal Haasan has stated that it is a competition with Rajini, not jealousy.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








