திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பைக் மீது பேருந்து மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

பைக் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது குறித்து...

News image

பைக் மீது பேருந்து மோதி விபத்து.

Updated On :17 மே 2026, 12:05 pm IST

இருசக்கர வாகனத்தின் மீது, அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் வயது 29. இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், இவரது மைத்துனர்கள் கார்த்திக், ஸ்டாலின் ஆகிய இருவரும் புதுவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிலம்பரசனை அழைத்துக் கொண்டு காலை 4 மணி அளவில் கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்றுள்ளனர்.

பெரிய முதலியார்சாவடி மதுவிலக்கு சோதனைச் சாவடி அருகே சென்றபோது, சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு அரசு விரைவுப் பேருந்து அதிவேகமாக வந்து கொண்டிருந்த நிலையில், முன்பு சென்ற இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது.

இதில், இருசக்கர வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே சென்ற கார் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று பேர் தடுமாறி கீழே விழுந்தனர், பின்னே வந்த தமிழக விரைவுப் பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனத்தின் மீது ஏறியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த மூன்று பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விரைவுப் பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Three members of the same family died on the spot after a bus crashed into a two wheeler at high speed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.