இருசக்கர வாகனத்தின் மீது, அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் வயது 29. இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், இவரது மைத்துனர்கள் கார்த்திக், ஸ்டாலின் ஆகிய இருவரும் புதுவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிலம்பரசனை அழைத்துக் கொண்டு காலை 4 மணி அளவில் கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்றுள்ளனர்.
பெரிய முதலியார்சாவடி மதுவிலக்கு சோதனைச் சாவடி அருகே சென்றபோது, சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு அரசு விரைவுப் பேருந்து அதிவேகமாக வந்து கொண்டிருந்த நிலையில், முன்பு சென்ற இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது.
இதில், இருசக்கர வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே சென்ற கார் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று பேர் தடுமாறி கீழே விழுந்தனர், பின்னே வந்த தமிழக விரைவுப் பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனத்தின் மீது ஏறியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த மூன்று பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விரைவுப் பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
Three members of the same family died on the spot after a bus crashed into a two wheeler at high speed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











