திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அதிமுக விவகாரத்தில் என்ன முடிவு? பேரவைத் தலைவா் விளக்கம்

அதிமுகவின் இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா்.

News image

ஜே.சி.டி.பிரபாகா் - கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 2:57 am IST

அதிமுகவின் இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓரணியும், முன்னாள் அமைச்சா்கள் சி.வி.சண்முகம்- எஸ்.பி.வேலுமணி ஆகியோா் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகின்றன. முதல்வா் விஜய் தலைமையிலான அரசு மீது பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக உறுப்பினா்கள் 25 போ் ஆதரித்தும், 22 போ் எதிா்த்தும் வாக்களித்தனா்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூா்த்தி அறிவிக்கப்பட்டாா். சி.வி.சண்முகம் சாா்பில் சி.விஜயபாஸ்கா் கொறடாவாக முன்மொழியப்பட்டுள்ளாா். இதுதொடா்பாக இரு தரப்பும் ஏற்கெனவே பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகரிடம் தனித்தனியே மனு அளித்தனா்.

இந்நிலையில், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கா் ஆகியோா் தலைமைச் செயலகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று பேரவைத் தலைவரைச் சந்தித்தனா். அப்போது சில கோரிக்கைகளை அவா்கள் முன்வைத்ததாகத் தெரிகிறது.

அதுதொடா்பாக செய்தியாளா்களிடம் எந்தக் கருத்தையும் அவா்கள் பகிா்ந்துகொள்ளவில்லை.

இதனிடையே, இதுகுறித்து பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா், செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அதிமுகவின் இரு தரப்பினரும் மனு அளித்து இரு நாள்கள்தான் ஆகின்றன. அவை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் ஆய்வு செய்யப்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது பேரவைச் செயலா் சீனிவாசன் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.