தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

கடந்த 4 ஆண்டுகளாக இபிஎஸ் செய்த ஒரே வேலை நீக்குவதுதான்: சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு!

செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தது குறித்து...

News image

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் - படம்: விடியோ கிளிப்

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

கடந்த 4 ஆண்டுகளாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி செய்த ஒரே வேலை நீக்குவதுதான் என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் கட்சிப் பதவிகளை நீக்கி, 17 மாவட்டங்களுக்கான புதிய செயலாளர்களை எடப்பாடி கே. பழனிசாமி நியமித்தார்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

எங்களது கட்சிப் பதவிகளை பறிக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை. எங்களை நீக்கிய அறிவிப்பு செல்லாது. அதிமுகவின் அடிப்படை கொள்கையே தீயசக்தி திமுக ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

ஒற்றைத் தலைமை வேண்டும் என நிலைப்பாட்டை நாங்கள்தான் எடுத்தோம். அதற்கான தண்டனையை நாங்கள் அனுபவித்து வருகிறோம். சுயமாக அவர் ஒன்றும் பொதுச் செயலாளராகவில்லை, நாங்கள்தான் அவரைத் தேர்ந்தெடுத்தோம்.

கடந்த 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி செய்த ஒரே வேலை நீக்குவது மட்டுமே. அவர் நீக்கியவர்கள் அனைவரும் இன்று பேரவையில் உறுப்பினராக உள்ளனர்.

என்றைக்கு பொதுச்செயலாளராக எடப்பாடியை தேர்ந்தெடுதோமோ அன்றைக்கே, அதிமுக குடும்ப அரசியலுக்கு சென்றுவிட்டது.

அதிமுக செயற்குழு கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடுக்கப்பட்ட முடிவு. மக்களவைத் தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக முடிவு எடுத்தார். பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தை இன்று வரை சொல்லவில்லை.

Summary

Former Minister C.V. Shanmugam has alleged that the only task AIADMK General Secretary Edappadi Palaniswami has undertaken over the past four years is expelling members.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.