தமிழ் செய்திகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் வலுவடைந்துள்ளது. பிளவை நோக்கி அக்கட்சி சென்று கொண்டிருக்கிறது.
சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க 17 எம்எல்ஏக்களும், எஸ்.பி.வேலுமணியை நியமிக்க 30 எம்எல்ஏக்களும் தனித்தனி அணிகளாக இடைக்கால சட்டப்பேரவைத் தலைவரிடம் திங்கள்கிழமை கடிதம் கொடுத்ததன் மூலம் அக்கட்சியில் நிலவி வரும் கோஷ்டி மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
”சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியடைந்துள்ளது. விஜய் முதல்வராக வேண்டும் என்று மக்கள் வாக்களித்துள்ளனர். அதை அதிமுக வரவேற்கிறது.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை ஆட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம்.
திமுகவை எதிர்த்து 50 ஆண்டுகளாக அரசியல் செய்து வருகிறோம். திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். பெரும்பாலான அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏற்க மறுத்தனர்” என்றார்.
Summary
Former Minister C.V. Shanmugam has stated that he has decided to support the administration of the Tamilaga Vettri Kazhagam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










