தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதில்லை! மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி!!

பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவது நிறுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக மதுப் பிரியர்கள் தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image

முதல்வர் விஜய்.

Updated On :12 மே 2026, 1:45 pm IST

தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதிலிருந்து மதுக்கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 10 வாக்குவதில்லை என்று மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

இந்த 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் மது வாங்குபவர்கள், காலி மதுபாட்டில்களை கொடுத்துவிட்டு ரூ.10 திரும்பப் பெறும் திட்டம், இரு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தை அப்போதைய எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக மற்றும் புதுவரவான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து, பேரவைத் தேர்தல் நடைபெறும்போது கோவையில் உள்ள பெரும்பாலான 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் ரூ.10 'ஸ்டிக்கர்' இன்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, கரூரில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த தற்போதைய முதல்வரும் தவெக தலைவருமான விஜய், பாட்டிலுக்கு ரூ. 10 வாங்குவதைப் பற்றியும், அப்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி பற்றியும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். மேலும், “பாட்டிலுக்கு பத்து ரூபாய்..” என்று பாடலும் பாடி விமர்சித்திருந்தார்.

சமீபத்தில் தமிழக முதல்வராக சி. ஜோசப் விஜய் கடந்த மே 10 ஆம் தேதி பதவியேற்றார். விஜய்யின் நேரடி கண்காணிப்பின் கீழ் டாஸ்மாக் நிர்வாகம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவர் பதவியேற்ற நாளிலிருந்து மதுபாட்டிலுக்கு கூடுதலாக வாங்கப்பட்டு வந்த ரூ. 10 நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ. 10 வாங்குவது நிறுத்தப்பட்டதா? என்ற அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளிவராத நிலையில், கூடுதலாக வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக மதுப்பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Liquor enthusiasts have expressed their delight that, since Joseph Vijay assumed office as the Chief Minister of Tamil Nadu, liquor shops are no longer charging an extra ₹10 per bottle.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.