தமிழ் செய்திகள்
சென்னை : தமிழக அரசின் நிர்வாகத்தில் சில முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசின் தலைமை செயலர் எம். சாய் குமார் இன்று (மே 12) மாலை வெளியிட்டார்.
அதில், முன்னாள் தலைமை செயலரான முருகானந்தம், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் / நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டார்.
நிதித்துறை செயலராக இருந்த டி. உதயசந்திரன் மாற்றப்பட்டு, எம். ஏ. சித்திக் நிதித்துறை கூடுதல் தலைமை செயலராக நியமிக்கப்பட்டார்.
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக இருந்த டி. கிறிஸ்துராஜ் மாற்றப்பட்டு கே. நந்தகுமார் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார். சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை முதன்மை செயலராக டாக்டர் எஸ். ஸ்வர்ணா நியமிக்கப்பட்டார்.
முதல்வரின் கூடுதலாக செயலராக விஷ்ணுவும் முதல்வரின் 3-ஆவது முதன்மை செயலராக அண்ணாதுரையும் நியமிக்கப்பட்டனர்.
முதல்வரின் தனிச் செயலாளர் - 3 என்றதொரு புதிய பொறுப்பில் விஷ்ணு நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே முதல்வரின் தனிச்செயலராக செந்தில் குமார் மற்றும் லட்சுமி பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary
IAS Officers Transferred!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








