மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்

தமிழக உள்துறை செயலர் மாற்றம் செய்துள்ள தேர்தல் ஆணையம் மணிவாசன் ஐஏஎஸ்-ஐ நியமனம் செய்துள்ளது.

News image

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் - - படம் - யூடியூப் / Election Commission of India

Updated On :11 ஏப்ரல் 2026, 7:55 am

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மாநிலத்தின் உள்துறை செயலரை மாற்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டின் உள்துறை செயலராக மணிவாசனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. தற்போது தமிழக அரசின் உள்துறை செயலராக இருந்த தீரஜ்குமாருக்கு, தேர்தல் தொடர்பான பணிகளை வழங்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அடுத்தடுத்து முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் உள்துறை செயலராக இருந்த தீரஜ்குமாரை மாற்றி, மணிவாசனை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டிருக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்துள்ளது.

இன்று மாலை 5 மணிக்குள் மணிவாசன் ஐஏஎஸ், உள்துறை செயலர் பதவியை ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழகத்தில் தலைமைச் செயலராக இருந்த முருகானந்தம், பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டிருந்தனர். நேற்று சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் மாற்றப்பட்ட நிலையில், இன்று உள்துறை செயலர் மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய தலைமைச் செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி என்.சாய் குமார் நியமிக்கப்பட்டார்.

தமிழக ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் மற்றும் ஆயுதப் படை காவல் துறை தலைமை இயக்குநராக சந்தீப் மிட்டல் என்ற 1995-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமித்தது.

சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டிருந்தார். குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபின் தினேஷ் மோதக் சென்னையின் புதிய காவல் ஆணையாராக பொறுப்பேற்க உள்ளார்.

Summary

The Election Commission, which has changed the Tamil Nadu Home Secretary, has appointed Manivasan IAS.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.