தமிழ் செய்திகள்
பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து தலைவர்களையும் பெருமைப்படுத்துவேன் என நம்புவதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ. செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 17 வது சட்டப்பேரவை இன்று (மே 11) கூடியது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு, தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவைத் தலைவர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அதிமுகவின் சி.வி. சண்முகம் தவிர எம்எல்ஏவாகத் தகுதி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் பேரவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றனர். பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 பேரும் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றனர்.
பதவியேற்புக்கு பிறகு செய்தியாளர்களுடன் செளமியா அன்புமணி பேசியதாவது:
''இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். தனது வாதங்களாலும் பேச்சுக்களாலும் வரலாற்றிம் இடம்பிடித்த எனது முன்னோர்களை நினைவுகூர்கிறேன். பாமக தலைவர்கள் அனைவரையும் பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன்'' எனக் குறிப்பிட்டார்.
Summary
I hope to make all PMK leaders proud. PMK leader Sowmiya Anbumani
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








