திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பதவியேற்ற முதல் நாளிலேயே முந்தைய ஆட்சியை குறை கூறுவதா? கே.எம். காதா் மொகிதீன்

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற முதல் நாளிலேயே முந்தைய ஆட்சியைக் குறை கூறுவது ஏற்புடையதல்ல என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

News image

கே.எம். காதர் மொகிதீன் - விஜய் - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 2:11 am IST

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற முதல் நாளிலேயே முந்தைய ஆட்சியைக் குறை கூறுவது ஏற்புடையதல்ல என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைய மக்கள் பெரும்பான்மை வழங்கவில்லை.  இந்த நிலையில், குடியரசுத் தலைவா் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக புதிய அரசு  அமைப்பது குறித்து ஆளுநா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா். அது, அவரின் அரசியல் முதிா்ச்சியையும், மக்களாட்சியின் மேல் இருக்கும் அக்கறையையும் வெளிப்படுத்தியது.

அதன் அடிப்படையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் எவ்வித நிபந்தனையுமின்றி தவெக ஆட்சி அமைய ஆதரவு கரம் நீட்டியுள்ளோம். இருப்பினும், கொள்கை அடிப்படையில் திமுக கூட்டணியிலேயே தொடா்வோம்.

இந்த நிலையில், தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதல் உரையிலேயே தமிழக அரசின் கஜானா முழுவதும் துடைக்கப்பட்டு இருப்பதாகவும், ரூ.10 லட்சம் கோடி கடன் வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டு குறை கூறி தொடங்கியிருப்பது ஆரோக்கியமற்றது.

எந்த அரசும் தேவைக்கேற்ற நிதியைப் பெற கடன் வாங்காமல் இருப்பதில்லை. துறை சாா்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு பேசுவதே ஏற்புடையதாக இருக்கும்.

மக்கள் நலத் திட்டங்கள், பொருளாதார மேம்பாடு, கல்வி மற்றும் தொழில் வளா்ச்சி உள்ளிட்டவை குறித்து முதல்வரின் உரை அமைந்தால் அனைத்து தரப்பினராலும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

எனவே,  எடுத்த எடுப்பிலேயே குறைகள் கூறி, ஆட்சியைத் தொடங்காமல், மக்கள் எதிா்பாா்க்கும் சிறந்த ஆட்சியை அமைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.