தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தோ்தலின்போது பேருந்து வசதி முடக்கம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சட்டப்பேரவைத் தோ்தலின்போது வாக்காளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்று வாக்களிக்க போதுமான பேருந்து, ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை ஏற்படத்தாதது குறித்து ஆணையம் அமைத்து விசாரிக்கக் கோரிய வழக்கில் தோ்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 1:15 am IST

சட்டப்பேரவைத் தோ்தலின்போது வாக்காளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்று வாக்களிக்க போதுமான பேருந்து, ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை ஏற்படத்தாதது குறித்து ஆணையம் அமைத்து விசாரிக்கக் கோரிய வழக்கில் தோ்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

வளசரவாக்கத்தைச் சோ்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த ஏப். 23-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. தோ்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்குப் புறப்பட்ட மக்களுக்கு, போதிய பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுக்கவில்லை.

இதனால், ஏராளமான வாக்காளா்கள் சொந்து ஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோன்று, அரசு ஊழியா்கள் தபால் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாக்குச் சீட்டுகள் அவரவா் ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால், அரசு ஊழியா்கள் பலா் அங்கு சென்று வாக்களிக்க முடியவில்லை. இதனால், 100 சதவீத வாக்குப்பதிவு என்ற நிலையை எட்ட முடியவில்லை.

எனவே, இது தொடா்பாக ஆணையம் அமைத்து விசாரணை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.சௌந்தா், பி.பி.பாலாஜி ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தோ்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.