சென்னையில் கோடை கொளுத்தத் தொடங்கிய போது, ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது போல மிகச் சரியாக மே 6ஆம் தேதியும் கோடை மழை வெளுத்து வாங்கியது.
கோடை வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்த நேரத்தில் மே 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் என்று கேட்ட மக்கள் சற்று பதறித்தான் போயிருப்பார்கள்.
ஆனால், நீங்கள் என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்பது போல, இத்தனை நாள்களும் சென்னையை வாட்டி வதைத்து வந்த சூரியனோ, மே 4ஆம் தேதி ஆளையேக் காணோம் என்பது போல மறைந்துவிட்டது. கடந்த இரண்டு நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இன்றும் அப்படியே இருந்த நிலையில், திடீரென 11 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. சரியாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி 11.30 மணிக்கு மழை பெய்ததைப் போல ஒரு மாத இடைவேளையில் மீண்டும் அதே ஆறாம் தேதி 11.30 மணிக்கு, மணி அடித்தது போல மழை பெய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










