திருச்சியில் ஏப்ரல் 2 ஆம் தேதி தவெக விஜய் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு பிரச்சாரத்துக்கு தவெக அனுமதி கோரியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று(மார்ச் 30) தொடங்கியது.
நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், முக்கிய அமைச்சர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தவெக தலைவர் விஜய்யும் நேற்று பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடவுள்ள நிலையில் வருகிற ஏப். 2 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளார்.
ஏப்.2 ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள பாலக்கரை மாநகராட்சி அலுவலகத்தில் நண்பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யும் விஜய், அதன்பின்னர் அப்பகுதியில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
திருச்சி கிழக்கில் பிரசாரம் செய்ய போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி தவெக தரப்பில் திருச்சி காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Vijay Files Nomination in Trichy East on April 2: TVK Seeks Permission for Campaigning
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சியில் விஜய் ஏப். 14 இல் பிரசாரம்

விஜய்யின் கும்மிடிப்பூண்டி பிரசாரமும் ரத்து! குமரியில்..?
திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்!
மார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



